Friday 9 August 2013

முக நக.








1.
இன்று ஒரு கண் மருத்துவமனையில் காத்திருந்தோம். படிவம் நிரப்பிக்கொடுத்த பின்னரே சோதனைக்கு அனுமதிக்கப் படுவோம். பின்னால் இருந்து யாரோ, ‘பேனா தரலாமா?’ என்று கேட்டார். கொடுத்தேன். அதிகம் போனால் பத்து ரூபாய் இருக்கும். நாங்கள் அழைக்கப்பட்ட அவசரத்தில் அவரிடம் பேனா கொடுத்த நினைவே எனக்கு இல்லை. முதல் கட்ட கண் சோதனை முடித்து வர முக்கால் மணி நேரம் ஆகியிருக்கும். அந்தப் பகுதியில் இருந்து இன்னொரு பகுதிச் சோதனைக்குத் திரும்பும் நேரத்தில் என் முதுகை யாரோ தொட்டார்கள். ஸார். பேனாஎன்று சிரித்துக்கொண்டே நீட்டினார். மன்னிச்சுக்கிடுங்க. மறந்துட்டேன்என நான் அவருக்கு வருத்தம் தெரிவித்தேன். பெருந்தன்மையினால் அல்ல. என் பேனாவின் விலையை விட, அவர் எனக்காகத் தேடித் தேடிக் காத்திருந்த அந்த முக்கால் மணி நேரத்தின் விலையல்ல, மதிப்பு அதிகம். இப்போது மீண்டும் படிக்கலாம் , ”முக்கால் வாசிப்பேர் ஞாபகமாக மூடியைக் கழற்றிவிட்டுத்தான்...என்ற என்னுடைய அந்தக் கவிதையை.
 
2.
விஷால் பரத்வாஜின் நீலக்குடைதிரைப்படம் குறித்துச் சொல்கையில் ராஜு, உங்க கதையைப் படிக்கிற மாதிரி இருக்கு ப்பாஎன்றான். இந்த வார விகடனில்வட்டியும் முதலும்பகுதியில் அதைப் பற்றிப் படிக்கையில் நன்றாகத்தான் இருக்கிறது. அந்த நீலக்குடைச் சிறுமி போல, ‘இது என்னுது இல்ல. என்னுது மாதிரி இருக்குஎன நானும் சொல்லிக்கொள்ளலாம்.
நான் அந்தச் சிறுமியைப் போலத்தான் இருக்கிறேன். ஹரிதாஸ் படத்தில் மழைத்தாரையை ஏந்திக்கொண்டு தனியாக நிற்கும் சிறுவனைப் போலக் கூட.
 
3.
தமிழ்ப் பத்திரிக்கை ஓவிய உலகுக்கு ஹாஸிஃப் கான் ஒரு வித்தியாசமான வரவு. இந்த வாரம் விகடனில் ஒரு நடைபாதை ஓவியனை வரைந்திருக்கிறார். அவன் முன்புள்ள தரையில் ஒரு குழந்தையின் படமும் அதன் மேல் சிதறிக் கிடக்கும் சில்லறைகளும். நாம் பார்க்கிற கோணத்தில் தகடுபோலத் தெரியும் அந்தக் குழந்தையும் அந்த காசுகளின் உலோகக் கனமும் மிகச்சரியான பரிமாணத்தில் வரையப்பட்டிருக்கின்றன.
நான் இப்போதும் தரையில் வரையப்பட்டிருக்கிற அந்தக் குழந்தையையே பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அப்புறம் அந்த சில்லறைகளை

No comments:

Post a Comment